Pages

Thursday, October 29, 2009

வாழ்க்கை பாடம்

வாழ்க்கையில் மகிழ்ச்சி தேவை என்றால் முதலில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளையும் உங்கள் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டுமென எண்ணுவதை நிறுத்துங்கள்.
நீங்கள் வருந்துவதாலோ, அதையே நினைத்துக் கொண்டு இருப்பதாலோ எதுவும் மாறப் போவதில்லை. வாழ்வை அதன் போக்கில் விட்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கள். நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என எடுத்துக் கொள்ளுங்கள்.
எரிமலை சாம்பலில் அதிக சத்துக்கள் இருப்பதைப் போல் எந்த ஒரு துன்பத்திலும் நிச்சயம் ஒரு நன்மை இருக்கும். அன்னப்பறவை போல் துன்பத்தை விலக்கி நன்மையை மட்டும் நினைவில் கொள்ளுங்கள். எல்லா வெற்றிகளுக்கும் பின்னால் நிச்சயம் ஒரு வலி மிகுந்த கடினப் பாதை இருக்கும்.
மற்றவர்களிடம் குறை காணுவதை விட்டு உங்களுக்குள் என்ன நடக்கிறது என கவனியுங்கள். உங்கள் ஆழ்மனதின் விருப்பங்கள், நம்பிக்கைகளை அறிந்து, அதன் சின்னச் சின்ன ஆசைகளை நிறைவேற்றி, உங்களின் லட்சியத்திற்குத் தயார் படுத்துங்கள். அனைத்து வசதிகளும் இருந்தால்தான் சாதிக்க முடியும் என்பது தவறு. வசதி இருப்பின், வரும் வாய்ப்புகளை மட்டுமே பயன்படுத்த முயலுவோம். இல்லாவிட்டால்,
இனி என்ன செய்யலாம் என யோசித்தே மற்றவருக்கும் வாய்ப்புகளை வழங்குவோம். எப்போதும் ஏதோ ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டு நிம்மதியின்றி இருப்பவன் பைத்தியமென ஹெரொடொடுச் என்ற அறிஞர் கூறுகிறார்.மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை விட்டுவிட்டு, கடவுள் ஒரு வழியை மூடினால் ஒரு வழியைக் காட்டுவார் என எண்ணுங்கள். அதில் உங்களால் எவ்வளவு தூரம் சாதிக்க முடியும் எனப் பாருங்கள். ஒரு நிகழ்வு நிகழ்வில்லையெனில் அதில் உங்கள் குணத்திற்கு ஒவ்வாத ஏதோ ஒன்று உள்ளது என அர்த்தம். இன்று முதல் ஆனந்தம் என வீட்டில் உங்களுக்கு பிடித்த இடத்திலிருந்து உங்களுக்கு பிடித்த செயலைச் செய்யுங்கள்.வீட்டில் எந்த இடமும் பிடிக்கா விட்டால் வெளியே வாருங்கள். இயற்கை மலர்கள், மனிதர்கள், மரங்கள், மலைகள், நதிகள் எனப் பரந்து விரிந்திருக்கிறது. அதில் உங்களுக்குப் பிடித்த தனிமை நிச்சயம் கிடைக்கும். அந்தத் தனிமையில் உங்களைத் தேடி எதிர்மறை எண்ணங்களை விலக்குங்கள். மனதில் எதிர்மறை எண்ணங்களை விலக்கினால் அந்தக் காலி இடம் நேர்மறை எண்ணங்களால் நிறையும். இயற்கையை நம்பி வாழ்வின் ஒவ்வொரு வினாடியையும் ரசித்து உங்கள் லட்சியத்திற்குத் தேவையான உங்களிடம் இல்லாத திறமையைக் கற்றுக் கொண்டு, கடுமையான உழைப்புடன் நல்ல எண்ணங்களால் நல்முயற்சி செய்தால் வாழ்க்கையில் வெற்றி உங்களுக்கே!

Tuesday, October 27, 2009

ஒரு டிரைவ்இ மறைக்க

முக்கியமான தகவல்களை ஏனையோர் அணுகாமல் பாதுகாக்க விரும்புவோர்க்கு இது மிகவும் பயனுள்ள ஒரு குறிப்பு விண்டோஸ் இயங்கு தளத்தில் போல்டர்களை மறைத்து (Hide) வைக்கும் முறையை நீங்கள் அறிந்திருக்கலாம். போல்டர்களை மறைத்து வைப்பது போன்று கணினியிலுள்ள டரைவ்களையும் மறைத்து வைக்க முடியும். விண்டோஸில் இயங்கு தளம் மூலம் கணினியிலுள்ள எந்த ஒரு ட்ரைவையும் அடுத்த பயனர்களின் பார்வையிலிருந்து மறைத்து விடலாம். இதன் மூலம் உங்கள் அந்தரங்க தகவல்களுக்கு ஒரு பாதுகாப்புக கிடைக்கிறது. ஒரே நேரத்தில் எல்லா ட்ரைவ்களையுமோ அல்லது குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரமோ மறைத்து வைக்கலாம். அதற்கு நீங்கள் விண்டோஸ் ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றத்தைச் செய்து விட்டால் போதுமானது.
முதலில் விண்டோஸில் அட்மினிஸ்ட்ரேட்டராக லொக்-ஓன் செய்து கொள்ளுங்கள். அடுத்து ரன் (Run) பொக்ஸில் regedit என டைப் செய்து ஓகே சொல்லுங்கள். திறக்கும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவில் கீழே காட்டப்பட்டுள்ள இடத்தை அணுகுங்கள்.
HKEY_CURRENT_USER\Software\Microsoft\Windows\CurrentVersion \Policies\Explorer
இங்கு இறுதியாக Explorer ல் க்ளிக் செய்யுங்கள். அடுத்து விண்டோவின் வலப்புறம் ரைட் க்ளிக் செய்து புதிதாக NoDrives எனும் பெயரில் DWORD பெறுனமானத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். கணினியிலுள்ள ட்ரைவ் அனைத்தையும் மறைப்பதாயின் அதன் Value Data வாக 3FFFFFF எனும் பெறுமானத்தை வழங்குங்கள்.
அதேபோன்று குறிப்பிட்ட ஒரு ட்ரைவை மாத்திரம் மறைப்பதாயின் அதாவது A, B, C, D, E, F, G, H என ஆங்கில் எழுத்துக்கள் மூலம் குறிக்கப்படும் ட்ரைவ்களை மறைக்க 2, 4, 8, 16, 32, 64, 128 எனும் ஒழுங்கில் வழங்குங்கள். உதாரணமாக F ட்ரைவை மறைத்து வைக்க வேண்டுமாயின் 32 எனும் இலக்கத்தை Value Data வாக வழங்க வேண்டும்.
அடுத்து ரெஜிஸ்ட்ரி எடிட்டர் விண்டோவை மூடி விட்டு கணினியை மறுபடி இயக்க நீங்கள் மறைத்து வைத்த ட்ரைவை மை கம்பியூடர் விண்டோவில் பார்க்க முடியாது. மீண்டும் அதனைக் காண்பிக்க வேண்டுமானால் மேற் சொன்ன இதே வழியில் சென்று புதிதாக உருவாக்கிய DWORD பெறுமானத்தை அழித்து விட்டு கணினியை மறுபடி இயக்க வேண்டும்

Thursday, October 15, 2009

குறிக்கோள் - நன்றி தன்னம்பிக்கை

5 அற்புத வழிமுறைகள்
வெற்றி வாழ்விற்கு, சாதனை வாழ்விற்கு, சந்தோஷ வாழ்விற்கு அடிப்படை குறிக்கோள் மற்றும் வைராக் கியத்துடன் கூடிய திட்டமிட்ட செயல்பாடே ஆகும். வெற்றி என்பது குறிக்கோள்களை மட்டும் முடிவு செய்த வுடன் தானாக வருவது கிடையாது.
வெற்றி அல்லது சாதனை என்பது எந்த அளவுக்கு உங்கள் குறிக்கோளுக்காக வாழ்கிறீர்கள் என்பதை பொறுத்தே வருகின்றது. வெற்றி பெற்ற மனிதர்களிடம் கேட்பீர்களா னால், அவர்கள் நிச்சயம், “குறிக்கோளுக்காகவே எங்கள் வாழ்க்கை” என்ற தாரக மந்திரமே எங்கள் வெற்றிக்கு காரணம் என கூறுவார்கள். இதைத்தான் உலகத்தில் மிகவும் அற்புதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் பற்றி வேடிக்கையான செய்திகள் நிரூபிக்கின்றது. எடிசன் தன் கண்டுபிடிப்புகள் என்ற குறிக்கோள்களுக்காக உணவை மறந்த நாட்கள், மனைவியையே மறந்த தருணங்கள் இருந்ததாக வரலாறு கூறுகின்றது. ஆகவே குறிக் கோள்களை காதலிக்க துவங்கினால், குறிக் கோள்களை அடைய எத்தகைய தியாகங் களையும் செய்ய தயார் ஆகுவோம். வெற்றிகள் குவியத் துவங்கும். மகிழ்வான வாழ்க்கை வசப்பட ஆரம்பிக்கும். சாதனை சரித்திரத்தில் உங்கள் பெயர்களை பொன்னெழுத்துகளால் பொறிக்கப் படும் வாய்ப்பும் உருவாகும்.
சாதனை சரித்திரத்தை உருவாக்க வெற்றிப் பயணத்தை துவங்கி இருக்கும் என் இனிய தன்னம்பிக்கை வாசக நண்பர்களே, வாழ்வில் சாதனைகளை உருவாக்க உதவும் உயர்ந்த குறிக்கோள்களை உருவாக்கி, விடாமுயற்சியுடன் செயலாற்றி எளிதில் வெற்றியை ஈட்டும் வழிமுறைகளை இக்கட்டுரை மூலம் பார்க்கலாம்.
1. உள்நோக்கி பயணம் செய்யுங்கள்
இன்று பலரும் தங்கள் ஆசைகளை, குறிக்கோள்களை, விருப்பங்களை நிறைவேற்ற முடியாமல் போக முதல் காரணம், அந்த ஆசை அல்லது குறிக்கோள் உண்மையிலேயே அவருடைய ஆழ் மனதின் ஆசையாகவோ, குறிக்கோளாகவோ இருக்காது. அந்த ஆசை அல்லது குறிக்கோள் அவர் பெற்றோராலோ அல்லது அவர் நண்பராலோ அல்லது ஆசிரி யாராலோ அல்லது ஏதேனும் சூழ்நிலைகளோ அல்லது ஏதேனும் திரைப்பட காட்சிகளாகவோ அல்லது ஏதேனும் தொலைக்காட்சி தொடர் களாகவோ உருவாக்கப்பட்ட ஆசை அல்லது குறிக்கோளாக இருக்கலாம்.
ஆனால் நம் ஆழ்மனது உறுதியாக அடைய வேண்டும் என முடிவு செய்து விடுகின்ற ஆசைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை புறமனதும், ஆழ்மனதும் இணைந்து செயலாற்றி நிறைவேற்றி விடுகின்றன. எடுத்துக் காட்டாக உயிர்வாழ உதவும் ஆக்சிஜன், உணவு, நீர் போன்றவற்றை தேவைக்கேற்ப அடைந்தே தீரவேண்டும் என்ற அடங்கா ஆசை மற்றும் தேவை இயற்கையால் நம் ஆழ்மனதில் பதிய வைக்கப்பட்டுள்ளது. இப்போது நம் புறமனது வேண்டாம் என்று நினைத்தாலும் ஆழ்மனது எப்படியாவது புறமனதை ஒத்துக்கொள்ளச் செய்து நம் அடிப்படை தேவைகளை முடிந்த அளவுக்கு அடையச் செய்கின்றது. புறமனது உணவு வேண்டாம், கடமைதான் முக்கியம் என்று கட்டுப்படுத்த முயன்றாலும் ஆழ்மனது புறமனதோடு சமாதானத்தை ஏற்படுத்தி உணவு உண்ணுலதற்கான வழிவகையைச் செய்துவிடும்.
ஆகவே, தேர்ந்தெடுக்கப்பட்ட குறிக் கோளை அடைய வேண்டும் என்று முடிவெடுக்கு முன், அந்தக் குறிக்கோள் உங்கள் ஆழ்மனதின் விருப்ப, தேவை, மதிப்பீடுகள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்புடையது தானா என ஆராய்ந்து பார்ப்பது எளிதாக குறிக்கோளை அடையும் வழிமுறைக்கு அடிப்படையாகும்.
எப்போதேனும் உங்கள் ஆழ்மனதிற்கு ஏற்புடையதல்லாத ஒரு குறிக்கோளை அடைய ஆசைப்பட்டால், முதலில் மீண்டும் மீண்டும் உங்கள் ஆழ்மனதோடு தொடர்பு கொண்டு உங்கள் குறிக்கோளை எடுத்துரைத்து உங்கள் ஆழ்மனத்தின் குறிக்கோளாக மாற்றுங்கள்.
2. குறிக்கோளை முடிவு செய்யுங்கள்
நீங்கள் உள்நோக்கிய பயணத்தின் மூலம் ஆழ்மனதின் தன்மையை அறிந்து, அதன் விருப்பத்திற்கு ஏற்ப குறிக்கோளை முடிவு செய்தாலும் சரி, அல்லது உங்கள் தவிர்க்க முடியாத தேவை அல்லது சூழ்நிலை திணிக்கும் குறிக்கோளாக இருந்தாலும் சரி, உங்களை வெற்றியினராக மாற்ற உதவப்போகும் குறிக் கோளை கவனமாக ஆனால் உறுதியாக முடிவு செய்யுங்கள்.
நீங்கள் முடிவு செய்யப்போகும் குறிக் கோள் எந்த அளவு பொருத்தமானதாக, சரியானதாக, சிறப்பானதாக இருக்கின்றதோ, அதைப் பொறுத்துதான், நம் மனது நம் குறிக்கோளுக்காக நம்மை செயல்பட செய்து நம்மை வெற்றியடையச் செய்யும்.
எனவே உங்கள் வாழ்நாள் / நீண்ட கால குறிக்கோளை அடையும் முயற்சியில், குறிக் கோளை முடிவு செய்வது என்பது மிகவும் முக்கியமான கட்டம் ஆகும். ஆகவே நண்பர்களே, நீண்ட கால குறிக்கோளை முடிவு செய்யும்போது, ஒரு நாள் அல்லது ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் அல்லது ஒரு வருட காலத்தை செலவிட்டாலும் பரவாயில்லை. ஆனால் நீங்கள் முடிவு செய்யும் குறிக்கோள் உறுதியானதாக உயர்ந்ததாக, சிறந்ததாக, உள்ளத்திற்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும். ஏனென்றால் பலர் அவசர கதியில், பிறர் தலையீட்டை அனுமதித்து தங்கள் ஆழ்மனதிற்கு ஏற்புடையதல்லாத குறிக்கோள்களை முடிவு செய்து, வெற்றிகளை ஈட்டினாலும், உலக சாதனை சரித்திரத்தில் இடம்பெறும் வாய்ப்பை இழந்துவிடுகின்றனர்.
எடுத்துக்காட்டாக பலர் ஆசிரியர், பெற்றோர் விருப்பத்திற்கு இணங்க இந்திய ஆட்சிப்பணியியல் (IAS)தேர்வில் வெற்றி பெற்று உயர் பதவிகளில் வந்தும், ஒரு கட்டத்தில் தங்கள் பதவியை விட்டு விட்டு பிறதுறைகளில் மீண்டும் குறிக்கோள்களுடன் செயல்பட்டு அபரிதமான வெற்றிகளுடன் சாதனை நாயகர்களாக மாறமுடியாமல் அடங்கிவிடுகிறார்கள்.ஆகவே குறிக்கோளை முடிவு செய்யும் இந்த கட்டம் வாழ்க்கையில் மிக மிக முக்கிய மான தருணம். எனவே உங்கள் முழு கவனத்தையும் செலுத்துவதுடன், பல்வேறு வெற்றியாளர்கள், குடும்பத்தினர் மற்றும் அறிஞர் களிடமும் கருத்துக்களை கேட்டு மிக மிக கவன மாக சிறப்பாக குறிக்கோளை நிர்ணயம் செய்யுங்கள். அப்படி செய்தால், குறிக்கோளை நோக்கிய பயணம் வேகமாகவும், தடையற்ற தாகவும், மகிழ்ச்சியுடையதாகவும் அமைவது நிச்சயம்.
3. குறிக்கோளுக்காக வாழ துவங்குங்கள்
உங்கள் குறிக்கோள் நோக்கி நீங்கள் துவக்கிய பயணத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் உயர்ந்த பலன்களை, விளைவுகளை, முடிவுகளை அடைய வேண்டுமானால், நிச்சயமாக நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக வாழ வேண்டும். குறிக் கோளினையே வாழ்க்கையாக மாற்றவேண்டும். இன்று வரை உலக சாதனை சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒவ்வொருவருடைய வெற்றி வாழ்வின் பின்னணி என்ன என்று ஆராய்ந்தீர்களானால், நிச்சயம் அவர்கள் தங்கள் குறிக்கோளையே வாழ்க்கையாக மாற்றி வைராக்கியத்தோடு வாழ்ந்திருப்பார்கள்.
எப்படி குறிக்கோளினை வாழ்க்கையாக மாற்றுவது?
சாதாரண ஒரு குறிக்கோளினை அடைந்தே தீர வேண்டும் என்ற அசாதாரண அவசியமாக மாற்றினால் மட்டுமே, உங்கள் வாழ்வில் நீங்கள் கனவு காணும் உயரிய செயல்களை அல்லது சாதனைகளை அடைய முடியும். எனவே நீங்கள் கீழ்கண்ட வழிமுறைகளை பயன்படுத்தி நீங்கள் நினைக்கும் குறிக்கோள் களை, அடைந்தே தீர வேண்டும் என்ற வைராக்கியத்துடன் கூடிய இலக்குகளாக மாற்றுவது வெற்றிக்கு அடிப்படையாகும். குறிக்கோளையே வாழ்க்கையாக்க உதவும் வழிமுறைகள் :
மனதுக்கு பிடித்த குறிக்கோள்தானா என சரிபார்க்கவும்.
நீங்கள் அடைய நினைக்கும் குறிக்கோள் உண்மையிலேயே உங்கள் மனதுக்கு பிடித்த குறிக்கோள்தானா என ஆய்ந்து பார்க்கவும். அப்படி உங்கள் மனதிற்கு பிடிக்காத குறிக் கோளாக இருந்தால், நிச்சயமாக அந்த குறிக் கோளுக்காக உங்கள் நேரம் மற்றும் சக்தியை வீண் விரயம் செய்யாது வேறொரு குறிக்கோளை தேர்ந்தெடுக்க ஆயுத்தமாகுங்கள்.
திட்டவட்டமான குறிக்கோளா என உறுதி செய்யவும்
காரணம் நாம் அடைய நினைக்கும் குறிக் கோள் திட்டவட்டமானதாக இருந்தால் மட்டும் நம் மனதிற்கு அல்லது நமக்கு எதை அடைவதற் காக செயல்பட வேண்டும் என்ற உறுதியான உணர்வு இருந்து கொண்டிருக்கும். நாம் குறிப்பிட்ட எந்த விளைவுக்காக அல்லது முடிவுக்காக வாழ்கிறோம் என நம் ஆழ்மனதிற்கு உறுதியாக தெரிந்திருந்தால், நம் ஆழ்மனது நம்மை, நம் சக்தியை, நம் செயல்களை, நம் எண்ணங்களை முழுமையாக அந்த குறிப்பிட்ட இலக்கை நோக்கி செயல்படுத்த துவங்கும். நம் ஆழ்மனது திட்டவட்டமான செய்திகளை மட்டுமே நம்பும் தன்மை கொண்டது. அது நம் குறிக்கோளை நம்பி தன்னுள் இடம் அளித்து விட்டால், அந்த குறிக்கோளை நிறைவேற்றும் பொறுப்பை அது ஏற்றுக்கொள்ளுமானால், நிச்சயம் குறிக்கோளே நம் வாழ்வு என்ற நிலையில் நாம் நிச்சயம் தடைகளை தாண்டி வெற்றிகளை குவிப்போம். சாதனைகளை நிகழ்த்துவோம்.
குறிக்கோள்களுக்கு எழுத்து வடிவம் கொடுக்கலாமே
எப்போது உங்கள் மனது ஒரு உயரிய குறிக்கோளை அடைய வேண்டும் என்று முடிவு செய்கின்றதோ, உடனடியாக அந்த குறிக்கோளை எழுத்து வடிவத்தில் குறிக்கோளை திரும்ப திரும்ப படியுங்கள். தினமும் வாசியுங்கள். நீங்கள் தினமும் திரும்ப திரும்ப நடமாடும் இடங்களில் உங்கள் பார்வையில் படும்படி பதித்து வையுங்கள். இச்செயல் உங்களுக்கு உங்கள் குறிக் கோளை உங்கள் ஆழ்மனதில் பதிய வைக்க உதவும்.
ஆனால் சாதிக்க துடிக்கும் சாதனை மனிதர்கள் இந்த குறுக்கு வழிகள் எதுவும் இன்றியே அவர்கள் குறிக்கோளை நோக்கிய லட்சிய பயணத்தில் வைராக்கியத்தோடு, முழு மனதையும் ஈடுபடுத்தி செயலாற்றி வெற்றி கொண்டிருப்பர்.
தனியாத தாகம் கொள்ளுங்கள்
குறிக்கோளை அடைவதனால் வர விருக்கும். அற்புத நன்மைகளை நன்கு மனதில் பதிய வையுங்கள். இந்த நன்மைகள் உங்களுக்கு, உங்களை சார்ந்த குடும்பத்தவருக்கு, உங்கள், உங்கள் தன்மானத்திற்கு, சமூக அந்தஸ்திற்கு, உங்கள் பொருளாதார உயர்வுக்கு, உங்கள் வாழ்வின் அர்த்தத்திற்கு எந்த அளவுக்கு உதவி புரிய வாய்ப்பு இருக்கின்றது என்பதை அறிந்து முழுமையாக உணருங்கள். மேற்கண்ட எண்ணப் பதிவுகள் மற்றும் உணர்வுகளை மீண்டும் மீண்டும் மனக்காட்சித் திரையில் காணத் துவங்குங்கள். இந்த செயல் உங்கள் ஆழ்மனதிற்கு எப்படியேனும் இந்த குறிக்கோளை அடைந்தே தீர வேண்டும் என்ற தணியாத தாகத்தை ஏற்படுத்தி விடும். அந்த தாகம் எந்த தடைகள் வந்தாலும் தொடர்ந்து நம்மை ஊக்கப்படுத்தி வெற்றிப்பாதையை நோக்கி வழிநடத்தும்.
முடியும் என்று நினைத்தால் முடியும்.
பலரும் குறிக்கோள்களை அடைய முடியாமல், குறிக்கோள்களையே விட்டுவிட காரணம், நான் சாதரணமானவன், நான் திறமை யற்றவன், என்னால் முடியாது என்ற எதிர்மறை எண்ணங்களே. உலக வரலாற்றைபுரட்டி பார்த்தால் தெரியும். வெற்றி பெற்றவர்களில் அதிகமானவர்கள் ஏழ்மை, ஊனம், கல்வியறி வின்மை, என பல்வேறு தடைகளை தாண்டி வெற்றி பெற்றவரே என்பது புரிய வரும்.
ஆகவே நீங்கள் குறிக்கோளை அடைந்தே தீருவேன் என்ற மனநிலையை உருவாக்க வேண்டு மானால், வெற்றியாளர்களின் சுயசரிதைகளை படிப்பது பயிலரங்குகளில் கலந்து கொள்ளுவது, வெற்றி பெற்றவரின் சொற் பொழிவுகளை கேட்பது, என்னால் முடியும், என்னால் முடியும் என சுய அறிவுறுத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவது நல்லது.
வாழ்வின் அனைத்து பகுதிகளையும் கருத்தில் கொண்டு குறிக்கோள் முடிவு செய்வது நல்லதுகுறிக்கோள் முடிவு செய்யும்போது, வாழ்வின் ஒவ்வொரு பகுதி (குடும்பம், பொருளாதாரம், சமூகம், உடல்நலம், மனநலம் போன்ற காரணிகளை)களையும் திருப்திப் படுத்தும் அடிப்படையில் அமையும் படி பார்த்துக் கொள்ளவும்.
ஏனென்றால், குறிக்கோளை நோக்கி வேகமான வெற்றிப் பயணம் மேற்கொள்ளும் போது ஏதேனும் ஒரு வாழ்வு சார்ந்த காரணியில் திருப்தியின்மை ஏற்பட்டுவிட்டால், நம் குறிக்கோளை நோக்கிய செயல்பாடுகளில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆகவே குறிக்கோள் நிர்ணயம் செய்யும் வழிமுறையின் போது, உங்கள் குறிக்கோளை நோக்கிய பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உங்கள் வாழ்வு சார்ந்த அனைத்து காரணி களிலும் எந்த எந்த நிலையை எட்ட வேண்டும் என்ற துணை குறிக்கோள்களையும் முடிவு செய்வது நல்லது.
எடுத்துக்காட்டாக, குறிப்பிட்ட ஆண்டில், குறிப்பிட்ட மாதத்தில், குறிப்பிட்ட நாளில், நாம் அடைய முடிவு செய்திருக்கும் வாழ்நாளில் அடைய வேண்டிய குறிக்கோளினை நோக்கிய பயணத்தின் குறிப்பிட்ட கால கட்டத்தில், நம் உடல்நலம் எப்படி இருக்க வேண்டும் (எடை அளவு, இரத்த அளவு போன்ற காரணிகளில்)நாம் குடும்பத்திற்கு வழங்கும் தரமான நேரத்தின் அளவு (Quality time) எந்த அளவு இருக்க வேண்டும் என்பது போன்ற ஒவ்வொரு காரணிகளையும் குறிக்கோள் முடிவு செய்யும் வழிமுறையின் போது கருத்தில் கொள்ள வேண்டும்.
அவ்வாறு குறிக்கோளை அனைத்து குடும்ப, சமுதாய, தனிப்பட்ட காரணிகளையும் கருத்தில் கொண்டு முடிவு செய்வோமானால் நம் லட்சிய பயணம் தங்கு தடையின்றி வேகமாக செல்வது உறுதி. வெற்றியும் உறுதி.
முடியும் என்றால் முடிவெடுங்கள்
குறிக்கோள் நோக்கிய பயணத்தில் வெற்றியை நிர்ணயிக்கும் மற்றொரு காரணி, உங்கள் குறிக்கோள் உங்களிடம் உள்ள பல திறன் மற்றும் நேரத்தின் மூலம் அடைய முடியும் குறிக்கோளா? இல்லையா என்பது.
நீங்கள் நிர்ணயம் செய்யும் குறிக்கோள் உங்கள் கல்வி தகுதி, உடல் பலம், பண பலம், தேர்ந் தெடுக்கும் கால அளவு போன்றவற்றையும் கருத்தில் கொண்டு முடிவு செய்யப்பட வேண்டும். எடுத்துக் காட்டாக ஒரு கல்லூரியின் முதல்வராக வேண்டு மானால் 10 வருடம் விரிவுரையாளராக பணி யாற்றியே ஆக வேண்டும். அப்போது தான் உங்கள் குறிக்கோள் உங்கள் வாழ்வின் அடிப்படை அம்சமாக மாறும். நீங்கள் உங்கள் குறிக்கோளுக்காக அர்ப்பண வாழ்வு வாழ ஆரம்பிப்பீர்கள். உங்கள் சாதனை சாகசங்கள் எளிதில் நிறைவறேத் துவங்கும்.