"பிறருடைய வார்த்ததைகள் - உங்களது உற்சாகத்தை, உங்களுடைய முயற்சியை ஒருநாளும் குறைத்து விட முடியாது. நீங்கள் அனுமதித்தாலொழிய"....
***"எண்ணங்களில் வாழப்பார்க்கிறோம்.வார்த்தைகளில் தான் வாழ்கிறோம்.செயலில் அல்ல."
****"வாழ்க்கையின் எந்தத் துறையிலும், ஆன்மீகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும் - வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன." ------ (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
***"எண்ணங்களில் கவனமாக இருங்கள் -அது வார்த்தைகளாக வெளிப்படுபவை.வார்த்தைகளில் கவனமாக இருங்கள் -அது செயலாக வெளிப்படுபவை.செயல்களில் கவனமாக இருங்கள் -அது பழக்கமாக மாறுபவை.பழக்கங்களில் கவனமாக இருங்கள் -அது உங்கள் ஒழுக்கமாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள் -அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்."
*** "சொல்லுக்கும், செயலுக்கும் -நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்."
*** "பிறரது உதாசீனம் பிறரது அவமானச் சொல் -சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்."
***"அன்பான பதில் - கோபத்தை விரட்டி அடிக்கிறது.துக்ககரமான சொற்கள் - கோபத்தை உண்டாக்குகின்றன." ----- (சாலமன்)***
"சொற்கள் - பழைய அர்த்தங்களை இழந்து விடுவதே சமூதாயப் புரட்சியின் முதல் அறிகுறி." ----------(கிரேக்க வரலாற்று அறிஞர் துஸிடீடிஸ் 470 – 400 கி.மு)
*** "பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை மக்கட்பதடி" என்கிறார் வள்ளுவர்.
*** "மிகக் கடினமான பெரிய வார்த்தைகளைக் கொண்டுஅழகான பிரசங்கம் செய்து வருபவன் உண்மையில்உங்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை. அவன் தன் மேதாவித்தனத்தை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்." ------ (ஓ.மில்லர்)***
"கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவேஆறாது." ---- (ப்ராங்க்லின்)*** "மரணமும், வார்த்தைகளும், வரிகளும் - தவீர்க்க முடியாதவை." ---- (ஹாலிபர்ட்டன்)*** "பொய்யான சொற்கள் -தன்னுள்ளே கெடுதலை வைத்துக் கொண்டிருப்பதோடல்லாமல் அவைகள் ஆத்மாவையும் அதனோடு நோய்வாய்ப்படச் செய்கிறது." ----- (சாக்ரடீஸ்)*** "சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல.அந்தப் பொருளுக்கேற்ற வலிமையும் அதற்குள் இருக்கிறது" ------- (மகாத்மா காந்தி)***
"வார்த்தைகளில் - மென்மையும்,வாதத்தில் - அழுத்தமும் தேவை."*** "பாடலிலும், பேச்சிலும் சொற்கள் இருக்கின்றன.சொற்கள் எதைக் குறிக்கின்றனவோ அந்த வலிமை அந்தச் சொற்களுக்கு உண்டு. வலிமை என்ற சொல் திரும்பத் திரும்ப சொல்லப்படும் போது வலிமைதருகிறது. சோர்வு என்ற சொல் - சோர்வு தருகின்றது. இதில் சோர்வடையச் செய்யும் சொற்கள் மனிதசக்தியை வடித்துவிடுபவை."***
"மெழுகுவர்த்தி சிந்தனைகள் - தீப்பந்த வார்த்தைகள்."***
"மனிதனுடைய இதயக் குமறலே,அவனுடைய வார்த்தைகளாக வெளிப்படுகின்றன."***
"சொன்ன ஒரு சொல், விடுபட்ட அம்பு,கடந்து போன வாழ்க்கை,நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது." -------- (அராபிய நாட்டுப் பழமொழி)*** "கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும்,காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன." -------- (மனோதத்துவம்)***
"பிறருடைய வார்த்ததைகள் -உங்களது உற்சாகத்தை,உங்களுடைய முயற்சியைஒருநாளும் குறைத்து விட முடியாது.நீங்கள் அனுமதித்தாலொழிய."***
"சொற்களை -எண்ணிக்கை போடக்கூடாது.எடைதான் போட வேண்டும்."***
"சொற்கள் - தேனீக்களைப் போன்றது.அவைகளில் தேனும் உண்டு.கொடுக்கும் உண்டு."*** "மென்மையான ஒரு சொல்இதயவாசலைத் திறக்கிறது."*** "உணர்வதை நாம் செய்வோம்.சொல்வதை நாம் உணர்வோம்." ------- (செனிகா)***
"காலம் போகும்.வார்த்தை நிற்கும்."*** "அறிவுள்ள மனிதனுக்கு - ஒரு சொல் போதும்."*** "அம்புகள் - உடலை ஊடுருவித் தாக்கித் துளைக்கின்றன.கொடுஞ்சொற்கள் -ஆன்மாவை ஊடுருவித் தாக்கித் துளைக்கின்றன."***
"சுவாசிக்கும் எண்ணங்களே – எரியும் வார்த்தைகள்." ------ (கிரே)***
"குறைந்த வார்த்தைகள் -மேலான பிராத்தனையாகும்." -------- (லூதர்)***
"திரும்பத் திரும்பச் சொல்லும் வார்த்தைகள் -சுவையின்மையையும், சலிப்பும் ஏற்படுத்தும்." -------- (பாயிலே)***
"தீயைவிடக் கொடுமையானது – தீய சொல்."***
"தைரியமான சொற்கள் -மிகவும் தைரியம் நிறைந்த செயல்கள் -மனிதனை வீரனாக்கும்."*** "வார்த்தை ஒன்று தடை செய்யப்பட்டால்அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது.அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது.அந்த வார்த்தையில் விஷமேறிப் போகிறது." ---------- (லென்னி புரூஸ்)***
"வாழ்க்கையில் திரும்பப் பெற முடியாதவை –உயிரும், நேரமும், சொற்களும்."***
"சொல் வன்மைக்கு - மனத் தெளிவு அவசியம்.எந்த விஷயத்தின் நுட்பத்தையும், முழுத்திறமையையும் அலசி அறிந்து பகுத்தறிவோடு பிறருக்கு உண்மையைவிளக்கும் ஆற்றல் வேண்டும்." --------- (எமர்சன்)
Saturday, December 20, 2008
புகழ்ச்சி
நம்மைப்பற்றிய நம் அபிப்பிராயத்தை விட நம்மைப்பற்றிய பிறர் அபிப்பிராயத்திற்கும், புகழ்ச்சியான வார்த்தைகளுக்கும், எப்போது முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பிக்கின்றோமோ அப்போதே நாம் மனத்தளவில் நம்மை தாழ்த்திக் கொள்ள துவங்கி விட்டோம். பிறரின் அபிப்பிராயங்களும், பாராட்டுக்களும், புகழும், எப்போதும் நிரந்தரமல்ல. இப்படிப்பட்ட வசியப் பேச்சுக்கள் கேட்பவருக்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும்.நம்மைப்பற்றி பிறர் கூறும் புகழுரைகளையும் நாம் பொருட்படுத்தக்கூடாது. இகழுரைகளையும் நாம் ஏற்றுக் கொள்ளக் கூடாது. பொருந்தாத புகழுரைகளை ஏற்றுக் கொள்வதில் எவ்வளவு ஆபத்துக்கள் இருக்கிறதோ அவ்வளவு ஆபத்து நமக்குப் பொருந்தாத இகழுரைகளை ஏற்றுக் கொள்வதிலும் இருக்கிறது. புகழுரைகள் முதலில் நமக்கு போலி மகிழ்ச்சியையும், ஊக்கத்தையும் உண்டாக்கி பிறகு இழிவு மனப்பான்மையை ஏற்படுத்தி விடுகின்றன.திருந்துகின்ற நோக்கத்தோடு குறைகளைச் சுட்டிக் காட்டுகிறவர்களின் கருத்துக்கள் ஆக்கப்பூர்வமானவை. இவற்றை அலட்சியப்படுத்துவதும்தவறு. குறைகளையே கண்டுப் பிடித்துக் கொண்டிருக்கும் மனப்போக்கு வேறு. இது வேறு. குறைக் காண்பவர்கள் பிறர் குறைகளைச் சுட்டிக் காட்டுவதன் மூலமே தாங்கள் மிகவும் உயர்ந்தவர்கள் என்று மனச்செருக்கு கொள்ளும் விநோதப் போக்கு உள்ளவர்கள். பிறரின் செயலாற்றலைக் கண்டு பொறாமைப்பட்டு அதனை பழிக்கும் தவறான போக்கு உள்ளவர்கள்.ஆக்க சிந்தனைகளில் ஈடுபடும் போதும் செயல்களிலே கவனம் செலுத்தும் போதும் இப்படிப்பட்டவர்களை ஒதுக்கியே வைத்திருக்க வேண்டும்.நேரில் இருக்கும் போது ஒருவனைப் புகழ்ந்து பேசிவிட்டு பின்னால்இகழ்ந்து பேசும் இருமுகம் கொண்ட மனிதரா நாம்? வலியச் சென்று அவதூறு பேச்சிக்களை பேசுவதற்கு என்ன காரணம்? முரண்பாடான கருத்துக்களை சொல்ல வேண்டிய அவசியம் என்ன? இப்படியே மற்றவர்களை அவதூறாக பேசிக் கொண்டிருப்பதால் நமக்கு என்ன லாபம் என்று சிந்தித்துப் பார்த்திருக்கின்றோமா? "நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்" என்கிறார் வள்ளுவர்.எதிலும் தன்னை இழக்காமல் விஷயங்களைக் கணிக்கும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும் என வள்ளுவர் சொல்கிறார். அந்த மனோபலம் வேண்டும் நமக்கு. பிரச்சனைகள் வந்து மோதினாலும் பிறர் இகழ்ந்தாலும், புகழ்ந்தாலும் உள்மனம் சலனமற்று இருக்கும் தன்மைக்குப் பெயர் தான் மனோபலம்.ஆனால் மனிதனின் முதல் பலவீனமே புகழ்ச்சிக்கு மயங்குவதாகவே இருக்கிறது. புகழ்ச்சி என்பது வெறும் அலங்கார வார்த்தைகளால் ஆனது. உண்மைக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.புகழ்ச்சி பற்றி அறிஞர் சொன்ன கருத்துக்களை பார்ப்போம்!• - புரியாத விஷயத்தைப் புகழ்வது தவறு.இகழ்ந்து பேசுவதோ அதைவிடப் பெரிய தவறு. –(லியோனார் டோடாவின்ஸி)• - எதிர்த்து பேசினால் சுடச்சுட பதில் கொடுத்து விட முடியும்.புகழ்ந்து பேச ஆரம்பிப்பவனை அப்புறப்படுத்துவது கடினமான காரியம்.(கண்ணதாசன்)• - ஒருவனைப் புகழ்ந்து கொண்டே கவிழ்க்கும் அற்பர்களை விட - குறைக்கூறிக் கொண்டே மறைமுகமாக அவன் உயரக் காரணமாகும் மனிதர்கள் எவ்வளவோ மேல்.• - தன் புகழ் பற்றி ஒருவள் பேசக் கூடாது.தன்னிடம் இருக்கும் அதிகாரத்தைப் பற்றி ஓருவன் பேசக் கூடாது.தன்னிடம் இருக்கும் செல்வத்தைப் பற்றி ஒருவன் பேசக் கூடாது.மற்றவர்கள் சொன்ன இரகசியங்களைப் பற்றி ஒருவன் பேசக் கூடாது.(புராணங்களிலிருந்து..)• - ஒவ்வொருவனையும் புகழ்ந்து புகழ்ந்து பேசு.நீ புகழ்ந்த பிறகும் யார் யார் உன்னை இகழ்ந்து பேசுகிறார்களோஅவர்களை உன்பட்டியலில் இருந்து ஒதுக்கிக் கொண்டே வா.மிஞ்சுகிறவர்களை கெட்டியாகப் பிடித்துக் கொள்.(கண்ணதாசன்)• - மற்றொருவன் உன்னைப் புகழட்டும்.உன்னை உன் வாயால் புகழாதே.• - முன்னின்று புகழ்ந்து பேசுபவனும்,பின்னாலிருந்து கிண்டிவிடுபவனும் ஒரே தன்மையினர் தான்.• - பிறரால் புகழப்பட வேண்டும் என்று வாதப்பிரதிவாதம் செய்பவன்தான் தன்னைப் பற்றி தாழ்ந்த அபிப்பிராயம் கொண்டிருக்கிறான். பிறரால் புகழப்பட வேண்டும் என்ற ஏக்கத்தில் பிறரை எதிர்பார்க்கிறான்.• - ஒருவனை புகழ்ந்து கூறும் போது அவன் எப்படி நடந்து கொள்ளுகிறான்என்பதைப் பார்த்து அவனை நாம் சரியாக மதிப்பிட்டு விட முடியும்.(ஸெனேகா)• - புகழ்ச்சியான சொல்லுக்கு அடிப்பணியாதே.இகழ்ச்சியான சொல்லுக்கு கலங்காதே.• - நம்மைப் புகழ்ந்து பேசிவருகவர்களிடம் நாம் மிகவும் ஜாக்கிரதையாகஇருக்க வேண்டும். மற்றவர்கள் தங்களுடைய முன்னேற்றத்திற்காகநம்மை பயன்படுத்திக் கொள்ள நம்மைப் புகழ்ந்து பேசிவரக் கூடும்.(ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)• - தற்புகழ்ச்சி சிறுமையில் தெரியும்.ஈனர் உறவு இறுதியில் தெரியும்.• - புகழ்ச்சியை விட கண்டனம் ஆபத்து இல்லாதது. – (எமர்சன்)• - டூவே என்ற அமெரிக்க அறிஞர் சொல்கிறார்:நீ யாரைப் புகழ்கிறாய் என்று சொல். உன் இயல்பை நான் சொல்கிறேன்.இழிவான மனிதர்களைப் புகழ்ந்தால் உன்னுடைய சுபாவமும் இழிவானதே.பணக்காரனைப் புகழ்ந்தால் நீ இவ்வுலகத்திற்கு உரியவனாகிறாய்.பட்டம் பெற்றவர்களைப் புகழ்ந்தால் நீ முகஸ்துதி பேசுகிறவனாகிறாய்.யோக்கியமும், தைரியமும் ஆண்மையும் உள்ளவர்களைப் புகழ்ந்தால்நீயும் யோக்கியமும், தைரியமும், ஆண்மையும் உள்ளவனாகிறாய்.• - புகழ் மொழிகளின் மதிப்பு அதை பேசுபர் கையாளும் முறையைப்பொறுத்ததாகும். ஒருவன் கூறினால் புகழுரையாகத் தோன்றுவதுமற்றொருவன் கூறும் பொழுது இகழுரையாகவும் தோன்றக் கூடும்.( மாஸன் - 1725 -1797)• - தகுதியில்லாத புகழுரை மாறு வேஷம் போட்ட பழியாகும்.(போப் 1688 -1744)• - புகழையும், புகழ்ச்சியையும் வெறுக்கத் தெரிந்துக் கொள். காரணம்தீமையை வளர்ப்பது புகழ்மொழிகளே. – (ஜான் கேய். 1685 -1732)• - நாம் எக்காணைத்தை முன்னிட்டும் தற்புகழ்ச்சியில் ஈடுபடக் கூடாது.மற்றவர்களின் அறியாமையைச் சுட்டிக் காட்டி நையாண்டி செய்யக் கூடாது.நாம் பிறருக்குச் செய்துள்ள உதவிகளை எடுத்து எடுத்துப் பேசிக்கொண்டிருக்கக் கூடாது. அதேப்போல் பிறரை இழிவாகப் பேசுவதிலும்நாம் மகிழ்ச்சி அடையக் கூடாது.
Subscribe to:
Posts (Atom)