"பிறருடைய வார்த்ததைகள் - உங்களது உற்சாகத்தை, உங்களுடைய முயற்சியை ஒருநாளும் குறைத்து விட முடியாது. நீங்கள் அனுமதித்தாலொழிய"....
***"எண்ணங்களில் வாழப்பார்க்கிறோம்.வார்த்தைகளில் தான் வாழ்கிறோம்.செயலில் அல்ல."
****"வாழ்க்கையின் எந்தத் துறையிலும், ஆன்மீகத்திலாகட்டும், பாலுறவிலாகட்டும் - வார்த்தைகளே நம்மைத் தூண்டுகின்றன." ------ (ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி)
***"எண்ணங்களில் கவனமாக இருங்கள் -அது வார்த்தைகளாக வெளிப்படுபவை.வார்த்தைகளில் கவனமாக இருங்கள் -அது செயலாக வெளிப்படுபவை.செயல்களில் கவனமாக இருங்கள் -அது பழக்கமாக மாறுபவை.பழக்கங்களில் கவனமாக இருங்கள் -அது உங்கள் ஒழுக்கமாகின்றன.ஒழுக்கத்தில் கவனமாக இருங்கள் -அது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்."
*** "சொல்லுக்கும், செயலுக்கும் -நெருங்கிய சம்பந்தம் இருக்க வேண்டும்."
*** "பிறரது உதாசீனம் பிறரது அவமானச் சொல் -சில சமயம் நம் தன்னம்பிக்கையைக் குலைத்துவிடக் கூடும்."
***"அன்பான பதில் - கோபத்தை விரட்டி அடிக்கிறது.துக்ககரமான சொற்கள் - கோபத்தை உண்டாக்குகின்றன." ----- (சாலமன்)***
"சொற்கள் - பழைய அர்த்தங்களை இழந்து விடுவதே சமூதாயப் புரட்சியின் முதல் அறிகுறி." ----------(கிரேக்க வரலாற்று அறிஞர் துஸிடீடிஸ் 470 – 400 கி.மு)
*** "பயனில்லாத சொற்களைப் பாராட்டுகிறவனை மக்கட்பதடி" என்கிறார் வள்ளுவர்.
*** "மிகக் கடினமான பெரிய வார்த்தைகளைக் கொண்டுஅழகான பிரசங்கம் செய்து வருபவன் உண்மையில்உங்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க விரும்புவதில்லை. அவன் தன் மேதாவித்தனத்தை நிரூபிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறான்." ------ (ஓ.மில்லர்)***
"கால் இடறி கீழே விழும் போது ஏற்படும் காயம் ஆறிவிடும். ஆனால் யோசிக்காமல் தவறுதலாக சொன்ன வார்த்தைகள் ஏற்படுத்தும் காயம் ஆறவேஆறாது." ---- (ப்ராங்க்லின்)*** "மரணமும், வார்த்தைகளும், வரிகளும் - தவீர்க்க முடியாதவை." ---- (ஹாலிபர்ட்டன்)*** "பொய்யான சொற்கள் -தன்னுள்ளே கெடுதலை வைத்துக் கொண்டிருப்பதோடல்லாமல் அவைகள் ஆத்மாவையும் அதனோடு நோய்வாய்ப்படச் செய்கிறது." ----- (சாக்ரடீஸ்)*** "சொற்களுக்குப் பொருள் இருப்பது மட்டுமல்ல.அந்தப் பொருளுக்கேற்ற வலிமையும் அதற்குள் இருக்கிறது" ------- (மகாத்மா காந்தி)***
"வார்த்தைகளில் - மென்மையும்,வாதத்தில் - அழுத்தமும் தேவை."*** "பாடலிலும், பேச்சிலும் சொற்கள் இருக்கின்றன.சொற்கள் எதைக் குறிக்கின்றனவோ அந்த வலிமை அந்தச் சொற்களுக்கு உண்டு. வலிமை என்ற சொல் திரும்பத் திரும்ப சொல்லப்படும் போது வலிமைதருகிறது. சோர்வு என்ற சொல் - சோர்வு தருகின்றது. இதில் சோர்வடையச் செய்யும் சொற்கள் மனிதசக்தியை வடித்துவிடுபவை."***
"மெழுகுவர்த்தி சிந்தனைகள் - தீப்பந்த வார்த்தைகள்."***
"மனிதனுடைய இதயக் குமறலே,அவனுடைய வார்த்தைகளாக வெளிப்படுகின்றன."***
"சொன்ன ஒரு சொல், விடுபட்ட அம்பு,கடந்து போன வாழ்க்கை,நழுவ விட்டுவிட்ட சந்தர்ப்பம் -ஆகிய நான்கும் மீண்டும் திரும்ப வராது." -------- (அராபிய நாட்டுப் பழமொழி)*** "கண்ணில் பட்டுக்கொண்டே இருக்கும் காட்சிகளும்,காதில் விழுந்து கொண்டே இருக்கும் சொற்களும்,ஓசைகளும் நம்மையறியாமலேயே நம்முடைய மூளையில் பதிந்து விடுகின்றன. பதிந்து நமக்குத் தெரியாமலேயே நம் விருப்பு வெறுப்புகளை நிர்ணயித்து விடுகின்றன." -------- (மனோதத்துவம்)***
"பிறருடைய வார்த்ததைகள் -உங்களது உற்சாகத்தை,உங்களுடைய முயற்சியைஒருநாளும் குறைத்து விட முடியாது.நீங்கள் அனுமதித்தாலொழிய."***
"சொற்களை -எண்ணிக்கை போடக்கூடாது.எடைதான் போட வேண்டும்."***
"சொற்கள் - தேனீக்களைப் போன்றது.அவைகளில் தேனும் உண்டு.கொடுக்கும் உண்டு."*** "மென்மையான ஒரு சொல்இதயவாசலைத் திறக்கிறது."*** "உணர்வதை நாம் செய்வோம்.சொல்வதை நாம் உணர்வோம்." ------- (செனிகா)***
"காலம் போகும்.வார்த்தை நிற்கும்."*** "அறிவுள்ள மனிதனுக்கு - ஒரு சொல் போதும்."*** "அம்புகள் - உடலை ஊடுருவித் தாக்கித் துளைக்கின்றன.கொடுஞ்சொற்கள் -ஆன்மாவை ஊடுருவித் தாக்கித் துளைக்கின்றன."***
"சுவாசிக்கும் எண்ணங்களே – எரியும் வார்த்தைகள்." ------ (கிரே)***
"குறைந்த வார்த்தைகள் -மேலான பிராத்தனையாகும்." -------- (லூதர்)***
"திரும்பத் திரும்பச் சொல்லும் வார்த்தைகள் -சுவையின்மையையும், சலிப்பும் ஏற்படுத்தும்." -------- (பாயிலே)***
"தீயைவிடக் கொடுமையானது – தீய சொல்."***
"தைரியமான சொற்கள் -மிகவும் தைரியம் நிறைந்த செயல்கள் -மனிதனை வீரனாக்கும்."*** "வார்த்தை ஒன்று தடை செய்யப்பட்டால்அந்த வார்த்தைக்கு வலிமை வருகிறது.அந்த வார்த்தை வன்முறையை அடைகிறது.அந்த வார்த்தையில் விஷமேறிப் போகிறது." ---------- (லென்னி புரூஸ்)***
"வாழ்க்கையில் திரும்பப் பெற முடியாதவை –உயிரும், நேரமும், சொற்களும்."***
"சொல் வன்மைக்கு - மனத் தெளிவு அவசியம்.எந்த விஷயத்தின் நுட்பத்தையும், முழுத்திறமையையும் அலசி அறிந்து பகுத்தறிவோடு பிறருக்கு உண்மையைவிளக்கும் ஆற்றல் வேண்டும்." --------- (எமர்சன்)
No comments:
Post a Comment