Pages

Thursday, December 18, 2008

மெடிக்கல் பட்ஜெட்

மருத்துவ பட்ஜெட்….
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்கள் காய்ச்சலில் படுத்தவர்கள் கூட நன்கு தேறி வர நான்கைந்து நாட்கள் ஆகிவிடுகின்றன. இந்த நிலையில் நாட்பட்ட நோய்களுக்கு சிகிச்சை பெறுபவர்கள் மருத்துவர், மாத்திரைகள் துணையுடன் சலிப்புடன் வாழ்கின்றனர்.
அடிக்கடி மாத்திரைகளிலும் மாற்று மருத்துவமுறைகளிலும் கவனத்தைச் செலுத்தாமல் உணவில் கவனத்தைச் செலுத்தினால் உடல் நலத்தை மிகுந்த சக்தியுடன் திரும்பவும் புதுப்பித்து விடலாம்.
உதாரணமாக நீரிழிவு நோயாளிகளுக்கு அதிக உணவு கூடாது. எனவே, அவர்கள் உணவில் கவனத்தைச் செலுத்தும்போது உணவுகளையே மருந்தாகச் சாப்பிட்டு நோயைக் கட்டுப்படுத்தி வாழும் முறையைக் கையாள்கின்றனர். இதனால் மாத்திரைகளையும் குறைவாகச் சாப்பிட நேரிடுகிறது. ஆரோக்கியமும் நீடிக்கிறது.
இதே முறையை ஆரோக்கியமாக உள்ளவர்களும், தங்கள் நோய்க்குச் சிகிச்சை பெறுகிறவர்களும் பின்பற்றினால் ஒவ்வொரு நாளும் ஆரோக்கியம் புதுப்பிக்கப்பட்டு வாழ்நாளும் நீடிக்கும்.
கைக்குத்தல் அரிசி, கோதுமை உப்புமா, முளைவிட்ட கொண்டைக்கடலை, பாதாம் பருப்பு, வேர்க்கடலை, வால்நட் பருப்பு, பார்லி, வாழைப்பழம், உலர்ந்த திராட்சை, அன்னாசிப்பழம், சாத்துக்குடி, தேங்காய், பாகற்காய், அவரைக்காய், காரட், சோயா பீன்ஸ், பசலைக்கீரை, உருளைக்கிழங்கு இவை அனைத்தும் நோய்களைக் குணமாக்கி உடல் நலத்தைப் பாதுகாக்கும் சூப்பர் உணவுகளாகும். இந்த உணவு வகைகளில் துத்தநாக உப்பு, பைரிடாக்ஸின் என்ற வைட்டமின், மாலிக் அமிலம், சிட்ரிக் அமிலம், கால்சியம், தொற்றுநோய்க் கிருமிகளை அழிக்கும் வைட்டமின் சி ஆகியவை உண்டு. இது மட்டுமல்ல, கண்களில் உள்ள ரெட்டினாவிற்கு வைட்டமின் ஏ-யை விரைந்து அனுப்பும் வசதி, நோய் எதிர்ப்புப் பொருள்கள் தொடர்ந்து உற்பத்தி ஆகும் வசதி, கொலாஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் வசதி, மூளையும், நரம்பு மண்டலமும் சிறப்பாக இயங்க உதவும் சத்துணவு, இதயநோய், நீரிழிவு முதலிய முழுக்கட்டுப்பாட்டில் நீடிக்கும் வசதி, பற்சொத்தை வராமல் தடுப்பது, சோடியமும் பொட்டாசியமும் உடலில் போதுமான அளவு இருக்க உதவும் பைரிடாக்ஸின் செயல்முறை என அனைத்தும் இந்த சூப்பர் உணவு வகைகளில் உள்ளன.
மேற்கண்ட பட்டியலில் உள்ளபடி உணவுத்திட்டத்தைப் பின்பற்றினால் எளிமையாக ஒவ்வொரு செல்லும் புதுப்பிக்கப்படுகிறது. நோய்களும் மறைகின்றன.
காலையில் சாப்பிடும் முளைவிட்ட கொண்டைக்கடலையும், மதிய உணவில் சேரும் சோயா பீன்ஸும் அல்லது சோயா பாலும் இரத்தத்தை சுத்தப்படுத்திவிடுகின்றன. இதனால் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்பும் முழுமையாகக் குறைந்து போகிறது.
உடல் பலவீனத்தையும், பித்தத்தையும் அன்னாசிச்சாறு குணமாக்குகிறது. குடலில் புழுக்கள் இல்லாமல் பாதுகாத்தும் வருகிறது. சாத்துக்குடியில் கால்சியம் நன்கு கிடைப்பதால் எலும்புகள் பலமடைந்து சுறுசுறுப்பைத் தினமும் பெற்றுக் கொள்ளலாம். அன்னாசிப் பழச்சாறு உடலில் விஷப்பொருள்கள் சேராமல், அவற்றை உடனுக்குடன் வெளியேற்றி விடுகிறது. தொற்று நோயாலும், திடீர் திடீர் என்று காய்ச்சல், உடம்பு வலி என்று அவதிப்படுகிறவர்களும் அன்னாசியையும், சாத்துக்குடியையும் அடிக்கடி சாப்பிடவும்.
நமக்குத் தெரியாத, டாக்டரின் பரிசோதனையில் உறுதி செய்ய முடியாத, நமக்குத் தொல்லை கொடுக்கும் நோய்களையும் கூட மேற்கண்ட உணவுகளில் உள்ள பயோட்டின், பைரிடாக்ஸின் போன்றவை குணப்படுத்தும். ஒற்றைத் தலைவலி அடிக்கடி வந்தால் மேற்கண்ட உணவு வகைகளின் மூலம் உடல்நலத்தைப் புதுப்பிப்பதில் கவனம் செலுத்தினால் போதும்.
வந்தபின் பெரும் பணம் செலவு செய்து குணப்படுத்துவதை விட முன்கூட்டியே இந்த சூப்பர் உணவுகளை கவனமாகச் சேர்த்து வந்தால் மருத்துவ பட்ஜெட் கீழே விழுந்துவிடும். இந்த சூப்பர் உணவு மருந்துகளால் பின்விளைவுகள் எதுவுமில்லை என்பதும் நீங்கள் அறிந்த செய்தி.
மனித உறுப்புகளில் முக்கியமான கல்லீரலை, செலினியல் உப்பு உள்ள முளைவிட்ட கோதுமை, பார்லி, ஓட்ஸ், டர்னிப் கீரை முதலியன முழுமையாகப் பாதுகாக்கும். விரைந்து குணமாகவும், எப்போதும் முழு உடல் நலப் பாதுகாப்புடன் வாழவும், கல்லீரல் எக்காரணம் கொண்டும் கெட்டுப் போகாமல் இருக்கவும் மேற்கண்ட நான்கு உணவு வகைகளில் இரண்டையாவது தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.
சிகரெட் புகைக்காமல் இருந்தால்….
சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால் 24 மணி நேரத்தில் ஹார்ட் அட்டாக் அபாயம் முழுமையாகக் குறைகிறது. இரண்டு வாரம் புகைக்காமல் இருந்தால் இரத்த ஓட்டம் சீராகும். நடப்பதற்கு சிரமம் ஏற்படாது. நுரையீரல்களின் செயல்பாடு 30% அதிகரிக்கும். தெரு நாற்றம் மூக்கைத் துளைக்கும். உணவு ருசி நன்கு தெரியும். பசிப்பது அதிகரிக்கும். ஒரு மாதம் முதல் ஒன்பது மாதம் வரை புகைக்காமல் இருந்தால் மூச்சுவிடுதலில் உள்ள சிரமம் குறைந்துவிடும். இருமல், சைனஸ், சோம்பல் காணாமல் போயிருக்கும். ஒரு வருடம் புகைக்காமல் இருந்தால் இதயம் சம்பந்தமான நோய்களின் அபாயம் 50% குறைந்திருக்கும். புகைக்காத பழக்கம் தொடர்ந்தால் புற்று நோய் அபாயமே இல்லை. திடீர் ஹார்ட் அட்டாக் என்று பேச்சும் இல்லை. மன உறுதியுடன் ஒரு நாள் மட்டும் புகைக்காமல் இருந்துவிட்டால் எப்போதும் சிகரெட் பக்கம் தலை வைத்துப் படுக்கமாட்டார்கள்.

No comments:

Post a Comment